முட்டை பப்ஸ்


தேவையான பொருட்கள் :


பொருள்அளவு

மைதா மாவு கால் கிலோ

நெய் ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

முட்டை 6

வெங்காயம்1

பச்சை மிளகாய் 3

கரம்மசாலா 1 டீஸ்பூன்

மிளகாய்தூள் கால் டீஸ்பூன்

கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி

செய்முறை :


  மைதா மாவுடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தௌpத்து பூரி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து பத்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.


  பிறகு அதை வெளியில் எடுத்து பூரிக் கட்டையில் தேய்க்கவும்.


  பிறகு நெய்யை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் மேல் தடவி நான்காக மடித்து அதை அதி குளிர்சாதனப் பெட்டியில் பத்து நிமிடம் வைக்கவும்.


  எல்லா மாவையும் இதேபோல் செய்து வைக்கவும். மூன்றாவது முறையாக ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து சமமாக தேய்த்து செவ்வகங்களாக துண்டுகள் போடவும்.


  ஐந்து முட்டைகளை வேகவைத்து தோலை உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.


  ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.


  பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்கவும். 


  பிறகு பப்ஸ் துண்டுகளில் முட்டை துண்டினை ஒரு புறம் வைத்து அதனுடன் வதக்கிய கலவையை சேர்த்து வைத்து மறு புறத்தை மூடவும்.


  பிறகு அவனில் வைக்ககூடிய தட்டில் பப்ஸ்ஸை பரப்பி வைத்து அவனை 400 டிகிரி குல் சூடாக்கி அரைமணி நேரம் வைக்கவும். பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும். பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக ஆனவுடன் வெளியில் எடுத்து பரிமாறவும்.